Posted by admin on 22-06-2026
புத்தக வெளியீட்டு விழா மற்றும் மாணவர்களுக்கு பரிசளிப்பு
சிவகங்கை மாவட்டம்
நாட்டரசன்கோட்டை கலாம் உதவும் கரங்கள் சார்பில் புத்தக வெளியீட்டு விழா மற்றும் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. அமைப்பின் தலைவர் அரிமா முத்துப்பாண்டியன் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் பிரியதர்ஷினி கவிராஜ், துணைத் தலைவர் கார்த்திகா முருகானந்தம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கவிஞர் சரவணப்பாண்டி எழுதிய "விண்வெளி கண்ட விடிவெள்ளி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்" நூலை தமிழ்ச் செம்மல் பகீரத நாச்சியப்பன் வெளியிட, இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படை டி.ஐ.ஜி. ஜஸ்டின் ராபர்ட் பெற்றுக்கொண்டார்.
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் உயர்கல்வியைத் தொடர இயலாத ஏழை மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், நினைவுப் பரிசு மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது.
விழாவில் கல்வி, தமிழ் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்த பல்வேறு பிரமுகர்கள் வாழ்த்துரை வழங்கினர். பட்டிமன்றப் பேச்சாளர் ராமச்சந்திரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். செயலாளர் குணசேகரன் வரவேற்றார். பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் கலாம் உதவும் கரங்கள் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் ஐஏஎஸ் பொறுப்பேற்பு
சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் ஐஏஎஸ் பொறுப்பேற்பு.
மதுரை மாவட்ட ஆட்சியராக கடந்த ஜூன் 1ஆம் தேதி பொறுப்பேற்ற ஐ.ஏ.
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை, ஐக்கிய ஜமாத் கமிட்டி மற்றும் குளோபல் உயிர் அகாடமி இணைந்து நடத்திய யோகா விழிப்புணர்வு பயிற்சி முகாம்
உலக யோகா தினத்தை முன்னிட்டு காரைக்குடியில் யோகா விழிப்புணர்வு பயிற்சி முகாம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி
குளோப
இலுப்பக்குடியில் யோகா வடிவில் மிரள வைத்த ITBP வீரர்கள்
ஒரே சீருடை... ஒரே நோக்கம்...
ஒற்றுமையின் சக்தி! களமிறங்கிய 1400 பாதுகாப்பு வீரர்கள்
யோகா வடிவில் ! மிரள வைத்த I
Leave a Comment
Your comment will be visible after admin approval.