Posted by admin on 17-06-2026
இன்ஸ்டாகிராம் நட்பால் கேரளா செல்ல முயன்ற 18 வயது இளம்பெண்; பஸ்சில் தேடி மீட்ட சிங்கப்பெண் போலீசார்!
தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள “சிங்கப்பெண் போலீஸ்” திட்டம் மீண்டும் ஒரு முறை தனது செயல்திறனை நிரூபித்துள்ளது.
சிவகங்கை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் சம்பவத்தன்று வீட்டிற்கு திரும்பாததால் பதற்றமடைந்த அவரது பெற்றோர், சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சிங்கப்பெண் போலீஸ் படையைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர்.
தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசாருக்கு, அந்த இளம்பெண் மேலூர் பேருந்து நிலையத்தில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு விரைந்த சிங்கப்பெண் போலீசார், பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பல பேருந்துகளில் ஏறி சோதனை நடத்தினர். அப்போது ஒரு பேருந்தில் அமர்ந்திருந்த இளம்பெண்ணை கண்டுபிடித்து பாதுகாப்பாக மீட்டனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த இளம்பெண் இன்ஸ்டாகிராம் மூலம் கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழகி வந்ததும், அவரை நேரில் சந்திப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது.
மீட்கப்பட்ட இளம்பெண் பின்னர் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். சிங்கப்பெண் போலீசாரின் விரைவான நடவடிக்கையால் இளம்பெண் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
சிவகங்கை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா மதுரைக்கு பணியிட மாற்றம்
பொறுப்பேற்று இரண்டு நாட்களிலேயே மீண்டும் மாற்றம்
சிவகங்கை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா மதுரைக்கு பணியிட மாற்றம்
தவெக நிர்வாகி மருங்கிப்பட்டி ரமேஷ் சார்பில் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா
வரும் 22ஆம் தேதி தமிழக முதலமைச்சரின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக நிர்வாகியும், தொழிலதிபருமான மருங்
திருப்புவனத்தில் ரயில் இன்ஜின் மோதி இளைஞர் உயிரிழப்பு
ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு; ரயில்வே அதிகாரிகள் விசாரணை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் ரயில்வே தண்டவா
Leave a Comment
Your comment will be visible after admin approval.