Sat, Jun 20, 2026 07:39 PM

தேவகோட்டையில் பாலி*ல் தொந்தரவு புகாரை அலட்சியம் செய்த காவல் நிலைய ஆய்வாளர்கள் உட்பட ஐந்து போலீசார் பணியிடை நீக்கம்

Posted by admin on 22-05-2026


தேவகோட்டையில் பாலி*ல் தொந்தரவு புகாரை அலட்சியம் செய்த காவல் நிலைய ஆய்வாளர்கள் உட்பட ஐந்து போலீசார் பணியிடை நீக்கம்

தேவகோட்டையில் பாலி*ல் தொந்தரவு புகாரை அலட்சியம் செய்த காவல் நிலைய ஆய்வாளர்கள் உட்பட ஐந்து போலீசார் பணியிடை நீக்கம்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பாலி*ல் தொந்தரவு புகாரை பெற அலட்சியம் காட்டியதாக கூறப்படும் ஐந்து காவல்துறை பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க 36 வயது பெண் ஒருவர் ஆட்டோவில் சென்ற போது ஆட்டோ ஓட்டுநர்  பாலி*ல் ரீதியாக துன்புறுத்தல் செய்ததாக கடந்த 19ஆம் தேதி தேவகோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார்.  அப்போது தேவகோட்டை நகர் காவல் நிலையத்திலும், அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் அவரது புகார் உடனடியாக பெறப்படாமல், 
இரு காவல் நிலையத்திலும்  மாறி மாறி செல்லுமாறு கூறி அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அந்த பெண், இராமநாதபுரம் சரக டிஐஜி மணிவண்ணனிடம் நேரடியாக புகார் அளித்துள்ளார்.  புகாரின் அடிப்படையில் டிஐஜி உத்தரவின்பேரில் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் அலட்சியம் செய்தது உறுதியானதை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர் 40 வயதான மாதவன் மீது தேவகோட்டை நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் பாலியல் தொந்தரவு புகாரை பெற்று வழக்கு பதிவு செய்யாமல் அலட்சியம் செய்ததாக தேவகோட்டை நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் துரைராஜ், அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சீதாலட்சுமி, சிறப்பு காவல் சார்பு ஆய்வாளர்கள் ஜெயா மற்றும் ராஜேஸ்வரி, தனிப்பிரிவு காவலர் சந்தானம் உள்ளிட்ட ஐந்து பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவிட்டார்.
பாலியல் தொந்தரவு புகாரை பெறுவதில் அலட்சியம் காட்டிய காவல்துறையினருக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share: 5,009 Views

மேலும் படிக்க

சிவகங்கை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா மதுரைக்கு பணியிட மாற்றம் சிவகங்கை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா மதுரைக்கு பணியிட மாற்றம் பொறுப்பேற்று இரண்டு நாட்களிலேயே மீண்டும் மாற்றம்  சிவகங்கை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா மதுரைக்கு பணியிட மாற்றம் தவெக நிர்வாகி மருங்கிப்பட்டி ரமேஷ் சார்பில்     ஆரம்பப் பள்ளி  மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா தவெக நிர்வாகி மருங்கிப்பட்டி ரமேஷ் சார்பில் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா வரும் 22ஆம் தேதி தமிழக முதலமைச்சரின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக நிர்வாகியும், தொழிலதிபருமான மருங் திருப்புவனத்தில் ரயில் இன்ஜின் மோதி இளைஞர் உயிரிழப்பு திருப்புவனத்தில் ரயில் இன்ஜின் மோதி இளைஞர் உயிரிழப்பு ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு; ரயில்வே அதிகாரிகள் விசாரணை சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் ரயில்வே தண்டவா
Leave a Comment

Your comment will be visible after admin approval.