Wed, Aug 05, 2026 02:37 AM

சேம்பார் நடுநிலைப் பள்ளியில் செஸ் போட்டி

Posted by admin on 23-06-2026


சேம்பார் நடுநிலைப் பள்ளியில் செஸ் போட்டி

சேம்பார் நடுநிலைப்பள்ளியில் செஸ் போட்டி 

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஒன்றியம் சேம்பார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சதுரங்க போட்டி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சுரேஷ் தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் காளீஸ்வரன் முன்னிலை வகித்தார். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு  சதுரங்கம் எவ்வாறு விளையாடுவது என்ற பயிற்சி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் சுரேஷ் வழங்கினார். ஸ்மார்ட் டிவியில் வீடியோக்கள் ஒளிபரப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சேம்பார் நடுநிலைப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் 6 முதல் 8 வகுப்பு வரை மற்றொரு பிரிவாகவும் போட்டிகள் நடைபெற்றன. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் 12 பேரும் 6 முதல் 8 மாணவர்கள் 20 பேரும் கலந்து கொண்டனர். ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பிரிவில் வெற்றி பெற்று முதல் இடத்தை மாணவன் முகேஷ் இரண்டாவது இடம் டார்வின் தாவீது பெற்றனர். மூன்று மற்றும் நான்காம் இடம் முறையே மகதி ,அருள் ஜோஸ்வின் வெற்றி பெற்றனர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டியில் முதலிடம் ஆர்வின்  இரண்டாம் இடம் செலினா மூன்றாம் இடம் ஜோய் வின் வெற்றி பெற்றனர். அனைத்து போட்டிகளையும் தலைமையாசிரியர் சுரேஷ் மற்றும் ஆசிரியர்கள் காளீஸ்வரன், முத்துக்குமார், முருகன், சகாய செல்வி, பாரதி மலர், தனபாக்கியம் ஆகியோர்  நடத்தினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Share: 2,535 Views

மேலும் படிக்க

காமராஜர் பிறந்த நாள் விழா காமராஜர் பிறந்த நாள் விழா காமராஜர் பிறந்த நாள் விழா: மாணவர்களின் ஓவியங்களில் உயிர்ப்பெற்ற பெருந்தலைவர் சிவகங்கை: பெருந்தலைவர் காமராஜரின் ப காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு   மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல் காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராதிபுதூரில் உள்ள   அரசு  தொழிற்பயிற்சி  நிலையத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான மாணவ
Leave a Comment

Your comment will be visible after admin approval.