Posted by Admin on 22-06-2026
திருத்தளிநாதர் ஆலயத்தில் ஆனித் திருமஞ்சன விழா
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் திருத்தளிநாதர் ஆலயத்தில் ஆனித்திருமஞ்சன உற்வச விழா நடைபெற்றது.
குன்றக்குடி தேவஸ்தானத்திற்குட்பட்ட சிவகாமி உடனாய திருத்தளிநாதர் ஆலயத்தில் ஆனித்திருமஞ்சன விழாவையொட்டி உற்சவர் நடராஜர் அம்பாளுடன் கல் மண்டபம் எழுந்தருளினார். தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், திருமஞ்சனம், விபூதி உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சர்வ அலங்காரத்தில் சுவாமிகள் கோயில் உட்பிரகார வலம் வந்தனர் இதில் பெண்கள் மற்றும் பக்தர்கள் திரளான அளவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.மூலவரும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பாஸ்கர குருக்கள் தலைமையில் சிவாச்சாரியர்கள் சிறப்பு பூஜைகள் செய்திருந்தனர். விழா முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது.
சிங்கம்புணரி ஸ்ரீராமர் ஆலயத்தில் 108 திருவிளக்கு பூஜை
*சிங்கம்புணரி ஸ்ரீராமர் ஆலயத்தில் அன்னை சீதாதேவிக்கு 108 திருவிளக்கு பூஜை பெண்கள் விரதம் இருந்து குத்து விளக்கு பூஜ
மல்லல் ஸ்ரீ நாச்சியார் அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா
ஸ்ரீ நாச்சியார் அம்மன் கோவில் ஆடித்திருவிழா. பெண்கள் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை.
சிவகங்கை மாவட்டம், இளைய
அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறிய சாமியாடிகள்.
அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறிய சாமியாடிகள்.
*திருப்பத்தூர் புதுப்பட்டி அருள்மிகு ஸ்ரீ மாவூடியூத்து கா
Leave a Comment
Your comment will be visible after admin approval.