Posted by Admin on 01-08-2026
*சிங்கம்புணரி ஸ்ரீராமர் ஆலயத்தில் அன்னை சீதாதேவிக்கு 108 திருவிளக்கு பூஜை பெண்கள் விரதம் இருந்து குத்து விளக்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர்*
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அண்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ராமர் ஆலயத்தில் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பெண்கள் 108 திருவிளக்கு பூஜை செய்தனர். நல்ல மழை வேண்டியும், நோய் நொடியில்லா வாழ்க்கை அமைய வேண்டியும், மாங்கல்ய பலம் கிடைத்திட வேண்டியும், குழந்தைகள் கல்வி பூரணமாக கிடைக்க வேண்டிய இந்த பூஜை செய்யப்பட்டது.
இதில் 108 திருவிளக்குகள் குங்குமத்தால் அர்ச்சித்து லலிதா சகஸ்ரநாமம், 1008 திருமந்திரம் முழங்க மகாலட்சுமி பூஜை உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு மகாதீப ஆரத்தி அன்னை சீதா தேவிக்கு காண்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மூலவராக அருள் பாலிக்கும் ஸ்ரீ ராமர் ஸ்ரீ சீதம்மா ஸ்ரீ லட்சுமணர் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு மகாதீப ஆரத்தி காண்பிக்கப்பட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
மல்லல் ஸ்ரீ நாச்சியார் அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா
ஸ்ரீ நாச்சியார் அம்மன் கோவில் ஆடித்திருவிழா. பெண்கள் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை.
சிவகங்கை மாவட்டம், இளைய
அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறிய சாமியாடிகள்.
அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறிய சாமியாடிகள்.
*திருப்பத்தூர் புதுப்பட்டி அருள்மிகு ஸ்ரீ மாவூடியூத்து கா
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளியொட்டி 20,000 மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்
ஆடி முதல் வெள்ளி: மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில்
20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்
சிவகங்கை மா
Leave a Comment
Your comment will be visible after admin approval.