Sat, Jun 20, 2026 07:37 PM

திருப்புவனத்தில் ரயில் இன்ஜின் மோதி இளைஞர் உயிரிழப்பு

Posted by admin on 19-06-2026


திருப்புவனத்தில் ரயில் இன்ஜின் மோதி இளைஞர் உயிரிழப்பு

ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு; ரயில்வே அதிகாரிகள் விசாரணை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் மீது ரயில் இன்ஜின் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்புவனம் சேதுபதி நகர் பகுதியைச் சேர்ந்த முத்துராஜாவின் மகன் வசந்த் (22),  வழக்கம்போல் நடைப்பயிற்சிக்காக வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பும் வழியில் ரயில்வே பீடர் சாலை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, மதுரையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி ஆய்வுப் பணிக்காக இன்ஜின் மற்றும் ஒரு பெட்டியுடன் சென்ற ரயில் வந்துள்ளது.

ரயில் வருவதைக் கணிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்ற வசந்த் மீது ரயில் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

உயிரிழந்த வசந்தின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share: 14 Views

மேலும் படிக்க

சிவகங்கை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா மதுரைக்கு பணியிட மாற்றம் சிவகங்கை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா மதுரைக்கு பணியிட மாற்றம் பொறுப்பேற்று இரண்டு நாட்களிலேயே மீண்டும் மாற்றம்  சிவகங்கை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா மதுரைக்கு பணியிட மாற்றம் தவெக நிர்வாகி மருங்கிப்பட்டி ரமேஷ் சார்பில்     ஆரம்பப் பள்ளி  மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா தவெக நிர்வாகி மருங்கிப்பட்டி ரமேஷ் சார்பில் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா வரும் 22ஆம் தேதி தமிழக முதலமைச்சரின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக நிர்வாகியும், தொழிலதிபருமான மருங் சிவகங்கையில் முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு    சிறப்பு பூஜை,  அன்னதானம் சிவகங்கையில் முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை, அன்னதானம் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கையில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடைபெற்றது. தமிழக
Leave a Comment

Your comment will be visible after admin approval.