Posted by admin on 10-06-2026
திருக்களாப்பட்டியில் மதுபானக்கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம் திருக்களாப்பட்டியில் மதுபானக்கடையை அகற்றக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் அருகே திருக்களாப்பட்டி அரசுப்பள்ளி அருகே மதுபானக்கடை இயங்கி வருகிறது. கடந்தவாரம் பள்ளிமாணவன் அஸ்வின்(14) தனது நண்பர்களுடன் அக்கடையில் மதுபானம் வாங்கி அருந்திய நிலையில் ஏற்பட்ட தகராறில் அஸ்வின் கழுத்தறுத்து கொ*ல செய்யப்பட்டான். இச்சம்பவத்தைக் கண்டித்தும் பள்ளி அருகே நடத்தப்படும் மதுபானக்கடையை அகற்றக்கோரியும் கிராமத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சேவுகப்பெருமாள், மாவட்டத் தலைவர் சத்தியசீலன், சி.ஐ.டி.யு.மாவட்டச் செயலாளர் சேதுராமன், மாதர் சங்க துணைத் தலைவி சாந்தி, காந்திமதி மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் பாலு ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும் கிராம பொதுமக்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர்கள் மீனாம்பாள், மலர், பத்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா மதுரைக்கு பணியிட மாற்றம்
பொறுப்பேற்று இரண்டு நாட்களிலேயே மீண்டும் மாற்றம்
சிவகங்கை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா மதுரைக்கு பணியிட மாற்றம்
தவெக நிர்வாகி மருங்கிப்பட்டி ரமேஷ் சார்பில் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா
வரும் 22ஆம் தேதி தமிழக முதலமைச்சரின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக நிர்வாகியும், தொழிலதிபருமான மருங்
திருப்புவனத்தில் ரயில் இன்ஜின் மோதி இளைஞர் உயிரிழப்பு
ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு; ரயில்வே அதிகாரிகள் விசாரணை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் ரயில்வே தண்டவா
Leave a Comment
Your comment will be visible after admin approval.