Posted by Admin on 05-08-2026
பெண்கள் குறித்து இழிவாக பேசியதாக குற்றச்சாட்டு: உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி தவெக மகளிர் அணியினர் புகார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், பெண்கள் குறித்து திமுக இளைஞரணி செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இழிவாக பேசியதாகக் குற்றம்சாட்டி, தமிழக வெற்றிக் கழக (தவெக) மகளிர் அணியினர் காரைக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
காரைக்குடி முடியரசு சாலையில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட மகளிர் அணியினரும், கட்சித் தொண்டர்களும் கைகளில் பதாகைகள் ஏந்தி பேரணியாக புறப்பட்டனர். பேரணியின் போது உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர், காரைக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) ஆசிஷ் புனியாவிடம் புகார் மனுவை வழங்கினர். அந்த மனுவில், பெண்கள் குறித்து இழிவாக பேசியதாகக் கூறப்படும் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்தப் பேரணி மற்றும் மனு அளிக்கும் நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக மகளிர் அணியினருடன் ஏராளமான கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
" விஜய் அரசு கண்டிக்கப்பட வேண்டிய, தண்டிக்கப்பட வேண்டிய அரசு " திருப்பத்தூரில் கே.ஆர். பெரிய கருப்பன் விமர்சனம்
உதயநிதி கைது: "விஜய் அரசு கண்டிக்கப்பட வேண்டிய, தண்டிக்கப்பட வேண்டிய அரசு" – முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன
தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார் பேச்சு
முன்னாள் அமைச்சரின் முறைகேடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தவறுகள் இருந்தால் அவை மக்கள் மன்றத்தில
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
சிவகங்கை மாவட்டம் ம
Leave a Comment
Your comment will be visible after admin approval.