Posted by Admin on 01-08-2026
திருப்பத்தூர் அருகே நடைபெற்ற மாட்டு வண்டி எல்லை பந்தயத்தில் 38 ஜோடி மாடுகள் பங்கேற்பு. வழி நெடுகிலும் பார்வையாளர்கள் உற்சாகமாக கண்களிப்பு.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே காட்டாம்பூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்லை பந்தயம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் போட்டியில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 38 ஜோடி மாடுகள் பங்கேற்றன. பெரிய மாட்டு பிரிவுக்கு 7 கிலோமீட்டரும், சிறிய மாட்டு பிரிவுக்கு 5 கிலோமீட்டரும் பந்தய எல்லையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
பெரிய மாட்டு பிரிவில் 16 ஜோடி மாடுகளும், சிறிய மாட்டு பிரிவில் 22 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் மாடுகள் ஒன்றையொன்று முந்திச் சென்ற காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
காட்டாம்பூர், திருப்பத்தூர், திருக்கோஷ்டியூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்று போட்டியை உற்சாகமாகக் கண்டுகளித்தனர்.
போட்டி நிறைவில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார் பேச்சு
முன்னாள் அமைச்சரின் முறைகேடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தவறுகள் இருந்தால் அவை மக்கள் மன்றத்தில
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
சிவகங்கை மாவட்டம் ம
16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டடுப்பு
Leave a Comment
Your comment will be visible after admin approval.