Posted by Admin on 31-07-2026
ஜெயங்கொண்டநிலையில் குவாரிக்கு இதுவரை அனுமதி இல்லை – கிராம மக்களை நேரில் சந்தித்து அமைச்சர் டி.கே. பிரபு உறுதி
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியம், ஜெயங்கொண்டநிலை கிராமத்தில் 36 ஏக்கர் பரப்பளவில் குவாரி அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், இயற்கை மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு, ஜெயங்கொண்டநிலை கிராமத்துக்கு நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது பேசிய அமைச்சர், குவாரி அமைக்க அனுமதி கோரி மனுக்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன என்றும், இதுவரை எந்த குவாரிக்கும் அரசால் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாக பரவும் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட தங்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், தங்களின் இரண்டு செல்போன்கள் குவாரி தொடர்புடையவர்களிடம் இருப்பதாகவும், அவற்றை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, அமைச்சர் உடனடியாக கீழவளவு காவல் ஆய்வாளரிடம், சம்பந்தப்பட்ட செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
அமைச்சரின் உறுதியைத் தொடர்ந்து, மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள் "அமைச்சர் வாழ்க! வாழ்க!" என்று முழக்கமிட்டு அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார் பேச்சு
முன்னாள் அமைச்சரின் முறைகேடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தவறுகள் இருந்தால் அவை மக்கள் மன்றத்தில
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
சிவகங்கை மாவட்டம் ம
16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டடுப்பு
Leave a Comment
Your comment will be visible after admin approval.