Wed, Aug 05, 2026 04:03 AM

கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தை காரைக்குடிக்கு மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by admin on 30-07-2026


கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தை காரைக்குடிக்கு மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து    வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் உள்ள
கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தை காரைக்குடிக்கு மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு வழக்கறிஞர்கள்  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் இயங்கி வருகிறது.  காரைக்குடியில் சட்டக்கல்லூரி துவக்கப்பட்டதால் அங்கு சட்டக்கல்லூரி மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் சிவகங்கையில் செயல்பட்டு வந்த கூடுதல் நீதிமன்றத்தை காரைக்குடிக்கு மாற்றம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் சிவகங்கை வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகும் என கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Share: 9 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.