Posted by admin on 30-07-2026
சிவகங்கையில் உள்ள
கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தை காரைக்குடிக்கு மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் இயங்கி வருகிறது. காரைக்குடியில் சட்டக்கல்லூரி துவக்கப்பட்டதால் அங்கு சட்டக்கல்லூரி மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் சிவகங்கையில் செயல்பட்டு வந்த கூடுதல் நீதிமன்றத்தை காரைக்குடிக்கு மாற்றம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் சிவகங்கை வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகும் என கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார் பேச்சு
முன்னாள் அமைச்சரின் முறைகேடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தவறுகள் இருந்தால் அவை மக்கள் மன்றத்தில
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
சிவகங்கை மாவட்டம் ம
16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டடுப்பு
Leave a Comment
Your comment will be visible after admin approval.