Posted by admin on 29-07-2026
காரைக்குடி அருகே செயல்படாமல் உள்ள கால்நடை மருத்துவமனை; பல கிலோமீட்டர் அலைவதாக விவசாயிகள் வேதனை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூரில் செயல்படாமல் உள்ள கால்நடை மருத்துவமனையை மீண்டும் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்குடி அருகே அமராவதி புதூரில் கடந்த 1994 ஆம் ஆண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் கால்நடை மருந்தகம் தொடங்கப்பட்டது. இப்பகுதியில் கால்நடை வளர்ப்பை முதன்மை தொழிலாகக் கொண்டுள்ள ஏராளமான விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் இந்த மருந்தகத்தின் மூலம் பயனடைந்து வந்தனர்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த கால்நடை மருந்தகம் முறையாக செயல்படாத நிலையில் உள்ளது. தற்போது கட்டிடம் முழுமையாக பராமரிப்பின்றி பாழடைந்து காணப்படுவதுடன், சமூக விரோத செயல்களுக்கு இடமாக மாறியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் சிலர் மது அருந்தும் இடமாக இந்த கட்டிடம் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அமராவதி புதூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதற்காக காரைக்குடி அல்லது தேவகோட்டை உள்ளிட்ட நகரங்களுக்கு பல கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. அவசர சிகிச்சை தேவைப்படும் நேரங்களில் கால்நடைகளை கொண்டு செல்ல முடியாமல் பெரும் சிரமம் ஏற்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், நோய்வாய்ப்பட்ட மாடுகள், ஆடுகள் மற்றும் பிற கால்நடைகளுக்கு உடனடி மருத்துவ உதவி கிடைக்காததால் பொருளாதார இழப்புகளும் ஏற்படுவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கிராமப்புறங்களில் கால்நடை வளர்ப்பு முக்கிய வாழ்வாதாரமாக உள்ள நிலையில், மருத்துவ சேவை இல்லாதது விவசாயிகளை பெரிதும் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள அமராவதி புதூர் கால்நடை மருந்தகத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவும், தேவையான கால்நடை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்கவும், கட்டிடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார் பேச்சு
முன்னாள் அமைச்சரின் முறைகேடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தவறுகள் இருந்தால் அவை மக்கள் மன்றத்தில
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
சிவகங்கை மாவட்டம் ம
16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டடுப்பு
Leave a Comment
Your comment will be visible after admin approval.