Posted by admin on 29-07-2026
சிவகங்கை மாவட்டம்
வங்கிகள் மூலமாக ரூ. 29,505 கோடி கடன்
2026-27 ஆண்டில் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது -
வங்கியாளர்களுக்கான கூட்டத்தில், 2026-27 நிதி ஆண்டுக்கான
கடன் திட்ட அறிக்கையினை
மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், வெளியிட்டு தகவல்.
*****
சிவகங்கை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்கள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்,
மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் மாவட்ட வங்கிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக சிவகங்கை மாவட்டத்தின் 2026-27 ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், வங்கிகள் மூலமாக ரூ. 29,505 கோடி கடன் 2026-27 ஆண்டில் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நபார்ட் வங்கியுடன் இணைந்து இந்த கடன் திட்ட அறிக்கையை வடிவமைத்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை அடிப்படையாக கொண்டு, பல்வேறு துறைகளில் வங்கிகள் கடன் வழங்கிட இத்திட்ட அறிக்கையில் வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன.
கடன் திட்ட அறிக்கையில் விவசாயத் துறைக்கு ரூ.20,671 கோடியும், தொழிற்துறைக்கு ரூ.1,746 கோடியும், இதர முன்னுரிமை துறைகளுக்கு ரூ. 462 கோடியும் மற்றும் இதர துறைகளுக்கு ரூ.6,626 கோடியும் என ஆக மொத்தம் ரூ. 29,505 கோடி கடன் வழங்க இலக்கு வகுக்கபட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தெரிவித்தார்.
-2-
இந்திய ரிசர்வ் வங்கியால், சிவகங்கை மாவட்ட 2,935 மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் குறைந்தது 5,000 மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க அறிவுறித்தியுள்ளார். மேலும், மாவட்டம் முழுவதும் கல்விக்கடன் வழங்கும் முகாமினை நடத்த வேண்டும் என அறிவுறித்தியுள்ளார்.
மேலும், கடந்த நிதியாண்டில் (2025-26) சிவகங்கை மாவட்டமானது ரூ.27,054 கோடி கடன் வழங்க இந்திய ரிசர்வ் வங்கியால் கொடுக்கப்பட்ட இலக்கை காட்டிலும் 114% இலக்கு எட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், வெளியிட காரைக்குடி மண்டலம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் சகாரேயர் பெற்றுகொண்டார்.
இந்நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எஸ்.பிரவின்குமார், ரிசர்வ் வங்கி தலைமை மாவட்ட பொறுப்பாளர் வி.வி.பாபு, நபார்ட் வங்கியின் மாவட்ட மேலாளர் அனீஷ் குமார் மற்றும் அனைத்து வங்கியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார் பேச்சு
முன்னாள் அமைச்சரின் முறைகேடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தவறுகள் இருந்தால் அவை மக்கள் மன்றத்தில
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
சிவகங்கை மாவட்டம் ம
16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டடுப்பு
Leave a Comment
Your comment will be visible after admin approval.