Posted by Admin on 27-07-2026
*மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோத்ஸவ விழாவில் திருக்கல்யாண வைபவம்*
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் நடைபெற்று வரும் ஆடி பிரம்மோத்ஸவ விழாவில் சுந்தரராஜப் பெருமாள், சௌந்தர்வல்லித் தாயார் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இக்கோயிலில் ஆடி பிரமோத்ஸவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு சுந்தரராஜப் பெருமாள் சர்வ அலங்காரத்தில் சௌந்தரவல்லித் தாயார் சன்னதி முன் மண்டபத்தில் யானை வாகனத்தில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து திருமணத்திற்கான சம்பிரதாய பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. சுந்தரராஜப் பெருமாள் சார்பில் மூலவர் சௌந்தரவல்லித் தாயாருக்கும் உற்சவருக்கும் திருமாங்கல்ய நாண் அனுபவிக்கப்பட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. கோபி மாதவன் தலைமையிலான ஆச்சாரியார்கள் திருக்கல்யாண சடங்குகளை நடத்தி வைத்தனர். திரளான பக்தர்கள் திருக்கல்யாணத்தைக் கண்டு தரிசித்தனர். பின்னர் சுந்தரராஜப் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பெருமாள் பல்லக்கில் வீதி உலா வந்தார்.
தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார் பேச்சு
முன்னாள் அமைச்சரின் முறைகேடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தவறுகள் இருந்தால் அவை மக்கள் மன்றத்தில
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
சிவகங்கை மாவட்டம் ம
16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டடுப்பு
Leave a Comment
Your comment will be visible after admin approval.