Wed, Aug 05, 2026 02:37 AM

புதுப்பட்டியில் இளைஞர் தூக்கிட்டு உயிரிழப்பு 

Posted by admin on 24-07-2026


புதுப்பட்டியில் இளைஞர் தூக்கிட்டு உயிரிழப்பு 

புதுப்பட்டியில் இளைஞர் தூக்கிட்டு உயிரிழப்பு 


திருப்பத்தூர் டி.புதுப்பட்டியில்இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் விசாரணை.  சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையைச் சேர்ந்த முருகானந்தம் - கனிமொழி தம்பதியரின் மகன் விஷால்மணி(19). இவர் திருப்பத்தூர் அருகே புதுப்பட்டியில் உள்ள தனது அக்கா அபிநயா என்பவர் வீட்டிற்கு கோயில் திருவிழாவிற்காக வந்துள்ளார். இந்நிலையில்  இரவு வீட்டிலிருந்த அனைவரும் கோயிலுக்குச் சென்றிருந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதற்கு முன் அதிக நேரம் வீடியோகாலில் பேசிக்கொண்டிருந்ததாதக் கூறப்படுகிறது. சம்பவம் அறிந்த திருப்பத்தூர் நகர் காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல் சார்பாய்வாளர் ஹரிகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Share: 2,482 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.