Posted by admin on 23-07-2026
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சிவகங்கையில் DYFI–SFI ஆர்ப்பாட்டம்; மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் மாணவர்கள் மீது மத்திய அரசு மேற்கொண்டதாக கூறப்படும் நடவடிக்கையை கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) மற்றும் இந்திய மாணவர் சங்கம் (SFI) சார்பில் சிவகங்கை அரண்மனைவாசல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு DYFI மற்றும் SFI அமைப்புகளின் மாவட்ட நிர்வாகிகள் தலைமை தாங்கினர். இதில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் இரு அமைப்புகளின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், "நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்", "அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்", "மாணவர்கள் மீது அடக்குமுறையை கைவிட வேண்டும்", "மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை மதிக்க வேண்டியது அரசின் கடமை என்றும், கல்விக் கொள்கைகளில் மாணவர்களின் நலனுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அரண்மனைவாசல் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார் பேச்சு
முன்னாள் அமைச்சரின் முறைகேடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தவறுகள் இருந்தால் அவை மக்கள் மன்றத்தில
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
சிவகங்கை மாவட்டம் ம
16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டடுப்பு
Leave a Comment
Your comment will be visible after admin approval.