Posted by Admin on 22-07-2026
காரைக்குடி சிறுவனின் குடும்பத்தை நேரில் சந்தித்த கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு – கல்வி, மருத்துவ உதவிகளை ஏற்ப்பதாக உறுதி .
காரைக்குடியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 10 வயது சிறுவனின் பெற்றோர் தனலட்சுமி – மீனாட்சிசுந்தரம் தம்பதியரை சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு மற்றும் காரைக்குடி வட்டாட்சியர் ராஜா ஆகியோர் நேரில் சந்தித்து
முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, சிறுவனின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் மேலும், சிறுவனின் கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளை தாமே ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு தெரிவித்தார்.
இதனால் மகிழ்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு ஆகியோருக்கு தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். மேலும், தங்கள் குழந்தைக்கு ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சியினர், விஸ்வகர்மா சங்கத்தினர், காரைக்குடி மக்கள் மன்றம், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன், தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார் பேச்சு
முன்னாள் அமைச்சரின் முறைகேடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தவறுகள் இருந்தால் அவை மக்கள் மன்றத்தில
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
சிவகங்கை மாவட்டம் ம
16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டடுப்பு
Leave a Comment
Your comment will be visible after admin approval.