Wed, Aug 05, 2026 05:30 AM

காரைக்குடியில் மிதிவண்டி போட்டியினை துவக்கி வைத்த அமைச்சர் பிரபு

Posted by admin on 19-07-2026


காரைக்குடியில் மிதிவண்டி போட்டியினை துவக்கி வைத்த அமைச்சர் பிரபு

சிவகங்கை மாவட்ட மிதிவண்டி கழகத்தின் சார்பில் காரைக்குடியில் நடைபெற்ற
 மிதிவண்டி போட்டியினை அமைச்சர் Dr.பிரபு தொடங்கி வைத்தார்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாவட்ட மிதிவண்டி கழகத்தின் சார்பில் மாநில அளவிலான மிதிவண்டி போட்டி நடைபெற்றது. கோவிலூரில் இருந்து பிள்ளையார்பட்டி பாலம் வரை சுமார் 7 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இப்போட்டியினை
கனிம வளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு தொடங்கி வைத்தார். இப்போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து
200 க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் முதல் நான்கு இடங்களை பிடித்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு மெடல் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Share: 905 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.