Posted by admin on 17-07-2026
இளம் பெண் மருத்துவர் மர்ம மரணம்; உறவினர்கள் அதிர்ச்சி.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கணபதிபட்டியைச் சேர்ந்த சின்னநம்பி (25) என்ற இளம் பெண் மருத்துவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு முடித்த அவர், கடந்த 16-ம் தேதி பட்டம் பெற்றதாக கூறப்படுகிறது. சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்த சின்னநம்பி, உடல்நலம் சரியில்லை என பெற்றோரிடம் தெரிவித்திருந்தார்.
தனது தந்தைக்கு மருத்துவம் பார்த்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்ற நிலையில், மாலையில் வீட்டில் மூச்சு மற்றும் பேச்சு இல்லாத நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் ஊசி மற்றும் மாத்திரைகள் இருந்ததாக கூறப்படுவதால், அவரது மரணம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் புழுதிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் உடற்கூறாய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளதால், ஆர்டிஓ விசாரணையும் நடைபெற உள்ளது.
தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார் பேச்சு
முன்னாள் அமைச்சரின் முறைகேடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தவறுகள் இருந்தால் அவை மக்கள் மன்றத்தில
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
சிவகங்கை மாவட்டம் ம
16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டடுப்பு
Leave a Comment
Your comment will be visible after admin approval.