Posted by Admin on 17-07-2026
காரைக்குடியில் ஆடி தள்ளுபடி களைகட்டியது: பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு பட்டுப் புடவைகளை அள்ளி சென்றனர்.
ஆடி மாதத்தின் முதல் நாளை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள பிரபல ஜவுளிக்கடைகளில் அறிவிக்கப்பட்ட சிறப்பு தள்ளுபடி விற்பனைக்கு பெண்கள் அதிகாலையிலேயே திரண்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
பட்டுப்புடவைகளுக்கு 50 முதல் 70 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருந்ததால், காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளுடன் சென்னை, திருச்சி, புதுக்கோட்டை போன்ற நகரங்களிலிருந்தும் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து காத்திருந்தனர்.
கடை திறந்தவுடன் போட்டி போட்டுக் கொண்டு உள்ளே நுழைந்த பெண்கள், தங்களுக்குப் பிடித்த நிறம் மற்றும் வடிவமைப்பிலான பட்டுப்புடவைகளை ஆர்வத்துடன் தேர்வு செய்து வாங்கிச் சென்றனர். கணவர்களும் குடும்பத்தினரும் அவர்களுக்கு உதவியதுடன், ஆடி தள்ளுபடி விற்பனை காரைக்குடியில் உற்சாகமான ஷாப்பிங் சூழலை உருவாக்கியது.
தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார் பேச்சு
முன்னாள் அமைச்சரின் முறைகேடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தவறுகள் இருந்தால் அவை மக்கள் மன்றத்தில
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
சிவகங்கை மாவட்டம் ம
16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டடுப்பு
Leave a Comment
Your comment will be visible after admin approval.