Posted by admin on 14-07-2026
அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியல்: இளையான்குடி–சிவகங்கை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
சிவகங்கை அருகே பசும்பொன் நகர் பகுதி மக்கள், சாலை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரக்கோரி இளையான்குடி–சிவகங்கை நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீண்ட காலமாக அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டிய 80-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அரை மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இதனால் இளையான்குடி–சிவகங்கை நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
"அடிப்படை வசதிகள் வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும்" என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார் பேச்சு
முன்னாள் அமைச்சரின் முறைகேடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தவறுகள் இருந்தால் அவை மக்கள் மன்றத்தில
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
சிவகங்கை மாவட்டம் ம
16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டடுப்பு
Leave a Comment
Your comment will be visible after admin approval.