Posted by admin on 11-07-2026
குன்றக்குடி அடிகளாரின் 102-வது பிறந்தநாள்: மணிமண்டபத்தில் அரசு சார்பில் அமைச்சர்கள், அதிகாரிகள் மலரஞ்சலி!
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், குன்றக்குடி அடிகளார் 102-வது பிறந்தநாள் விழா அரசு விழாவாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவினை முன்னிட்டு, குன்றக்குடியில் அமைந்துள்ள குன்றக்குடி அடிகளார் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசின் சார்பில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தற்போதைய குன்றக்குடி ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் டாக்டர் T.K. பிரபு மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி
மானாமதுரை எம் எல் ஏ இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
இவர்களுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெக வீரபாண்டியன், திருப்பத்தூர் வட்டாட்சியர் மாணிக்கவாசகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்படப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார் பேச்சு
முன்னாள் அமைச்சரின் முறைகேடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தவறுகள் இருந்தால் அவை மக்கள் மன்றத்தில
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
சிவகங்கை மாவட்டம் ம
16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டடுப்பு
Leave a Comment
Your comment will be visible after admin approval.