Posted by admin on 09-07-2026
நகராட்சி ஆணையர் இருக்கை விவகாரம்: தவெக எம்எல்ஏ-வுக்கு திமுக வழக்கறிஞர் அணி நோட்டீஸ்
சிவகங்கை நகராட்சி ஆணையரின் இருக்கையில் அமர்ந்து ஆய்வு செய்ததாக எழுந்த சர்ச்சை தொடர்பாக, தவெக சட்டமன்ற உறுப்பினர் குழந்தைராணி நாச்சியாருக்கு திமுக வழக்கறிஞர் அணி சார்பில் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் துரை ஆனந்த் கூறுகையில், நகராட்சி ஆணையாளரை எழச்செய்து அவரது இருக்கையில் அமர்ந்ததுடன் அதிகாரிகளிடம் மிரட்டும் தொனியில் பேசியது நிர்வாக நெறிமுறைகளுக்கும் ஜனநாயகப் பண்புகளுக்கும் எதிரானது என குற்றம்சாட்டினார். மேலும், தனது செயலுக்கு குழந்தைராணி நாச்சியார் பொதுவெளியில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்; இல்லையெனில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என துரை ஆனந்த் மற்றும் திமுக வழக்கறிஞர் அழகர்சாமி தெரிவித்தனர்.
தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார் பேச்சு
முன்னாள் அமைச்சரின் முறைகேடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தவறுகள் இருந்தால் அவை மக்கள் மன்றத்தில
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
சிவகங்கை மாவட்டம் ம
16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டடுப்பு
Leave a Comment
Your comment will be visible after admin approval.