Posted by admin on 08-07-2026
திருப்பத்தூரில் மஞ்சுவிரட்டு காளைகளுக்கான அழகுப் போட்டி – ஏராளமான காளைகள் பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணா சாலை அருகிலுள்ள செம்மொழி பூங்கா வளாகத்தில், சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபரும் கல்வி கொடையாளருமான துவார் சந்திரசேகரின் 57வது பிறந்தநாளை முன்னிட்டு மஞ்சுவிரட்டு காளைகளுக்கான அழகுப் போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது.
பொதுவாக ஆண்கள், பெண்கள் மற்றும் பல்வேறு துறைகளில் திறமைகளை மதிப்பீடு செய்யும் வகையில் அழகுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை தமிழர்களின் பாரம்பரியமும் வீர விளையாட்டாகவும் விளங்கும் மஞ்சுவிரட்டு காளைகளை மையமாகக் கொண்டு அழகுப் போட்டி நடத்தப்பட்டது என்பது சிறப்பம்சமாகும்.
இந்தப் போட்டியில் காளைகளின் திமில், கொம்பின் அமைப்பு, உடல் கட்டு, அலங்காரம், சலங்கைகள் போன்ற பல்வேறு அம்சங்கள் மதிப்பீட்டு அளவுகோல்களாக எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் சிறப்பாக தேர்வு செய்யப்பட்ட முதல் மூன்று இடங்களைப் பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுத் தொகைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான மஞ்சுவிரட்டு காளைகள் போட்டியில் கலந்து கொண்டன. இந்நிகழ்ச்சியை காண மாடுபிடி வீரர்கள், மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் திரளாகக் கலந்து கொண்டு உற்சாகமாகக் கண்டுகளித்தனர்.
தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார் பேச்சு
முன்னாள் அமைச்சரின் முறைகேடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தவறுகள் இருந்தால் அவை மக்கள் மன்றத்தில
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
சிவகங்கை மாவட்டம் ம
16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டடுப்பு
Leave a Comment
Your comment will be visible after admin approval.