Wed, Aug 05, 2026 05:33 AM

விவசாயத்தை இழிவுபடுத்தும் கருத்துக்களை ஏற்க முடியாது தென் மாவட்ட விவசாய சங்கம் கண்டனம்

Posted by admin on 06-07-2026


விவசாயத்தை இழிவுபடுத்தும் கருத்துக்களை ஏற்க முடியாது    தென் மாவட்ட விவசாய சங்கம் கண்டனம்

விவசாயத்தை இழிவுபடுத்தும் கருத்துகளை ஏற்க முடியாது: தென் மாவட்ட விவசாய சங்கம் கண்டனம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற “உழவர் தியாகிகள் வீர வணக்க தினம்” நிகழ்ச்சியில் பங்கேற்ற தென் மாவட்ட விவசாய சங்க பொதுச் செயலாளர் அர்ஜுன், செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, தேர்தல் காலத்தில் அறிவிக்கப்பட்ட பயிர் கடன் தொடர்பான வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றும், இதை கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், “விவசாயத்தை விட விளையாட்டு கடினமானது” என்ற அமைச்சர் ஒருவரின் கருத்தை கண்டித்த அவர், உலகுக்கு உணவளிக்கும் வேளாண்மையை இழிவுபடுத்தும் எந்த பேச்சையும் விவசாயிகள் ஏற்க மாட்டார்கள் என்றும், இதுபோன்ற கருத்துகளை முதல்வர் கண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Share: 9 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.