Posted by admin on 03-07-2026
கொல்லங்குடியில் ஜூலை 8-ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம்
மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெறுகிறது
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டம், நாட்டரசன்கோட்டை உள்வட்டத்திற்குட்பட்ட கொல்லங்குடி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் வரும் ஜூலை 8-ம் தேதி நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தலைமையில் நடைபெறும் இம்முகாம், கொல்லங்குடியில் உள்ள கதிரேசன் கமலாவதி திருமண மண்டபத்தில் காலை 10 மணியளவில் தொடங்குகிறது.
முகாமில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை நேரடியாக மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து, அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் தொடர்பான தகவல்களைப் பெறலாம்.
எனவே, கொல்லங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது.
தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார் பேச்சு
முன்னாள் அமைச்சரின் முறைகேடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தவறுகள் இருந்தால் அவை மக்கள் மன்றத்தில
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
சிவகங்கை மாவட்டம் ம
16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டடுப்பு
Leave a Comment
Your comment will be visible after admin approval.