Wed, Aug 05, 2026 07:01 AM

காரைக்குடி கழனிவாசல் மாட்டு வண்டிப் பந்தயத்தில் வழுக்கி விழுந்தும் ஓடி வந்து பரிசை தட்டிச் சென்ற காளை

Posted by admin on 01-07-2026


காரைக்குடி கழனிவாசல் மாட்டு வண்டிப் பந்தயத்தில் வழுக்கி விழுந்தும் ஓடி வந்து பரிசை தட்டிச் சென்ற காளை

வழுக்கி விழுந்தும் ஓடிவந்து பரிசை தட்டிச் சென்ற காளை – மெய்சிலிர்த்த மாட்டுவண்டி ரசிகர்கள்!

சிவகங்கை மாவட்டம்​காரைக்குடி அருகே உள்ள கழனிவாசல் ஸ்ரீ ஐயுளி அம்மன் கோவில் வைகாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, பாரம்பரியமிக்க மாட்டு வண்டி பந்தயம் மிக விமர்சையாக நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாட்டு வண்டிகளும் இந்த பந்தயத்தில் கலந்துகொண்டு சீறிப்பாய்ந்தன.
​இப்போட்டிகள் கரிச்சான் (பெரிய மாடு) மற்றும் பூஞ்சிட்டு (இளம் காளைகள்) என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றன. சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மாட்டுவண்டி ரசிகர்கள், காளைகள் எல்லை நோக்கிப் பாய்ந்து செல்வதைக் கண்டு ஆரவாரம் செய்தனர்.

​பந்தயத்தின் ஒரு பகுதியாக, சாரதி கணேசன் என்பவர் ஓட்டி வந்த மாட்டு வண்டி எல்லையை நோக்கிப் பாய்ந்து வந்து கொண்டிருந்தது. அப்போது, மாட்டின் மீது தண்ணீர் ஊற்றியதால்  வண்டியை இழுத்து வந்த ஒரு காளை திடீரென நிலைதடுமாறி வழுக்கி கீழே விழுந்தது.
​இதைக்கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நொடியில், அந்த வீரியமிக்க காளை சற்றும் தொய்வடையாமல், மின்னல் வேகத்தில் மீண்டும் எழுந்து நின்றது. விழுந்த அடியைப் பொருட்படுத்தாமல், முன்பை விட அதிக வேகம் சீறிப்பாய்ந்து சென்று பந்தய இலக்கைத் தட்டிச் சென்றது. நான்காவது இடத்தை பிடித்தது 

​கீழே விழுந்தும் மனம் தளராமல், எழுந்து ஓடி வெற்றியைப் பதிவு செய்த காளையின் இந்த அசாத்திய வீரத்தையும், மாட்டின் சுறுசுறுப்பையும் கண்ட மாட்டுவண்டி ரசிகர்கள் மெய்சிலிர்த்துப் போயினர்.

Share: 1,559 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.