Wed, Aug 05, 2026 07:01 AM

உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் மாணவர்கள்–ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா அமைச்சர் டி.கே பிரபு பங்கேற்பு

Posted by admin on 28-06-2026


உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் மாணவர்கள்–ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா   அமைச்சர் டி.கே பிரபு பங்கேற்பு

உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் மூன்று மாவட்டங்களில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவியருக்கும் மதிப்பெண் பெற ஊக்கமளித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா. அமைச்சர் டாக்டர் டி கே பிரபு பங்கேற்பு.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த  தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கும்  அதிகம் மதிப்பெண் பெற ஊக்கமளித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மூன்று மாவட்டத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.  
உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு பங்கேற்று சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

Share: 673 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.