Posted by admin on 28-06-2026
சிவகங்கையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து! காரைக்குடியில் முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் டி.கே. பிரபு
சிவகங்கை மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாமை, காரைக்குடி மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளும் பயன்பெறும் வகையில்
சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர நல மையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட 1,197 நிரந்தர மையங்களிலும், 54 நடமாடும் மையங்களிலும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட 19 இடைநிலை மையங்களிலும் என மொத்தம் 1,270 மையங்களில் முகாம்கள் நடைபெறுகின்றன.
இந்த முகாம்களின் மூலம் சுமார் 1,00,779 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், பொது சுகாதாரத்துறை, சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவைகள் துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 5,404 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மீண்டும் சொட்டு மருந்து வழங்க பெற்றோர்கள் முன்வர வேண்டும் என்றும், போலியோ நோயை முற்றிலும் ஒழிக்கும் அரசின் முயற்சிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் டி.கே. பிரபு கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் மீனாட்சி, காரைக்குடி மாநகராட்சி ஆணையர் கே. பாலு, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார் பேச்சு
முன்னாள் அமைச்சரின் முறைகேடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தவறுகள் இருந்தால் அவை மக்கள் மன்றத்தில
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
சிவகங்கை மாவட்டம் ம
16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டடுப்பு
Leave a Comment
Your comment will be visible after admin approval.