Wed, Aug 05, 2026 02:35 AM

திருப்புவனம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

Posted by admin on 26-06-2026


திருப்புவனம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

திருப்புவனம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு – போலீசார் விசாரணை


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில், திருப்புவனம் சந்தை மார்கெட் இருந்து மடப்புரம் கோவில் செல்லும் சாலையில் உள்ள வைகை ஆற்று பாலத்தின் அடிப்பகுதியில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கிடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்புவனம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், உயிரிழந்த நபர் யார், அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து திருப்புவனம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share: 679 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.