Posted by admin on 24-06-2026
கவியரசர் கண்ணதாசனின் நூறாவது பிறந்தநாள் விழா காரைக்குடியில் உள்ள கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபத்தில் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கண்ணதாசனின் நூறாவது பிறந்தநாள் விழா செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. கண்ணதாசன் மணி மண்டபத்தில் உள்ள கண்ணதாசன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து கண்ணதாசனின் மகள் விசாலாட்சி கண்ணதாசன் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி மற்றும் அகில இந்திய கவியரசர் கண்ணதாசன் மன்ற தலைவர் டாக்டர் ஆர் வி எஸ் சுரேந்திரன் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உட்பட பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் ஜெக வீரபாண்டியன் செய்திருந்தார்.
தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார் பேச்சு
முன்னாள் அமைச்சரின் முறைகேடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தவறுகள் இருந்தால் அவை மக்கள் மன்றத்தில
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
சிவகங்கை மாவட்டம் ம
16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டடுப்பு
Leave a Comment
Your comment will be visible after admin approval.