Wed, Aug 05, 2026 08:32 AM

வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் : சிவகங்கை நகராட்சி அதிரடி நடவடிக்கை

Posted by admin on 23-06-2026


வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் : சிவகங்கை நகராட்சி அதிரடி நடவடிக்கை

வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு 'சீல்': சிவகங்கை நகராட்சி அதிரடி நடவடிக்கை

சிவகங்கை நகராட்சிக்குச் சொந்தமான கடைகளில் வாடகை மற்றும் வரி பாக்கிகளை செலுத்தாத கடைகள் மீது நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

பலமுறை எச்சரிக்கை நோட்டீஸ் மற்றும் கால அவகாசம் வழங்கப்பட்டும் வாடகை பாக்கியை செலுத்தாத கடைகளுக்கு எதிராக, நகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர்.

இதன்படி, நகராட்சிக்குட்பட்ட 139 கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 4 கடைகள் பூட்டப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டன. வாடகை பாக்கி வசூல் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share: 1,330 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.