Posted by admin on 22-06-2026
சாலை விபத்தில் அடுமனை உரிமைளார் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடந்த சாலை விபத்தில் அடுமனை உரிமையாளர் உயிரிழப்பு.
திருப்பத்தூர் அருகே பிரான்மலையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஆனந்த்(30) இவர் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே ஐயங்கார் என்ற அடுமனை நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஏரியூர் மஞ்சுவிரட்டையொட்டி தனது மனைவியின் ஊரான அம்மாச்சிப்பட்டிக்குச் சென்று விட்டு தனது பைக்கில் திருப்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது கா.பிள்ளையார்பட்டி அருகே பைக் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலைக்காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், தகவலறிந்த திருக்கோஷ்டியூர் காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்து இவ்விபத்துக்குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார் பேச்சு
முன்னாள் அமைச்சரின் முறைகேடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தவறுகள் இருந்தால் அவை மக்கள் மன்றத்தில
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
சிவகங்கை மாவட்டம் ம
16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டடுப்பு
Leave a Comment
Your comment will be visible after admin approval.